தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!
-
இரத்த அழுத்தம் இருப்பவர்கள், சீரக நீரை எப்போதும்
குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சீரகத்தில்
பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழத்ததை சீராக
வைத்துக் கொள்ளும்.
-
சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி
செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்
தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை
வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய
அல்சர் நோய் தீரும்.
-
சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர் பருகுவது
அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. அது
இளமையை தக்கவைக்க உதவும். சீரக நீரில் இருக்கும்
ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும்.
-
முடியின் வேர்கால்கள் வளர்வதற்கும் உதவும். முடி உதிர்தலையும்,
முடி இழப்பையும் தடுக்கும்.
-
மலச்சிக்கலை போக்க, சீரகத்தில் உள்ள நார்சத்து உதவும்.
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவபவர்கள், சீரக நீரை வெறும்
வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.
-
சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம்
செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது,
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
-
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச்
சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி
குணமாகும்.
-
அடிக்கடி வயிற்று கோளாறு இருந்தால் வீட்டில் சாதாரணத்
தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் பாதி சூட்டில்
சீரகத்தண்ணீர் அருந்துங்கள் வயிற்று கோளாறு குணமாகும்.
-
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக